Search

Sunday, February 1, 2015

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்....

 3-2-2015 அன்று வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.!




வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று வடலூரில் உள்ள ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்'', ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

வடலூரில் காட்டப்படும் ஜோதி தரிசனம் வித்தியாசமானது

அன்று காலை நேரத்தில் கிழக்கே சூரியன் தோன்றுவதும் ,மேற்கே சந்திரன நிறைவு பெறுவதும் ,மத்தியில் ஜோதி தெரிவதும்,ஒரே நேரத்தில் மூன்று ஜோதியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுவே வடலூரின் தைப்பூச ஜோதி தரிசனத்தின் தனிசிறப்பாகும் .

ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் !

திருந்தும் உள்ளத் திருக்கோயில் ஞான
சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன் !

நம் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுளைக்  கண்டு அனுபவித்து மக்களுக்கு காட்டுவதற்காகவே ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது.

நம் வள்ளல்பெருமான் இந்த மாயா மறைப்புத் திரைகளாகிய தத்துவ படலங்களை பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் .

கரைவின் மாமாயைக் கரும் பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

மேலே கண்ட ஏழு திரைகள் மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன. .அதை விளக்கும் வகையில் வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் கட்டப்படுகின்றது ,முதலில் நமக்குத் தெரிவது கறுப்புத்திரை ,அதற்குப்பின் நீலத்திரை ,அதன்பின் பச்சைத்திரை ,அதன்பின் சிவப்புத்திரை,அதன்பின் பொன்மைத் திரை ,அதன்பின் வெண்மைத் திரை,அதன்பின் இறுதியாக கலப்புத்திரை,இவ் ஏழு திரைகளையும் ஒவ்வொன்றாக நீக்கித் திரை மறைப்பை எல்லாம் நீக்கியபின் திரைக்குப் பின்னர் பிரதிட்டை செய்யப் பெற்றுள்ள கண்ணாடியில் அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காட்டப்படும் .

அனைத்து உயிர்கள் இடத்தும் ஈரமும், கருணையும், இரக்கமும்,ஆண்டவர் இடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் வழிபாட்டு முறைகளாகும்,

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பது வள்ளலாரின் அழுத்தமான செய்தியாகும்.கடவுள் அன்பும், கருணை உள்ளவர் நாமும் கருணை உள்ளவர்களாக மாறினால்தான் இறைவன் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த செயல்களாலும் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையின் செய்தியாகும் .

 எல்லா நாட்களையும் விட ''தைப்பூசம்'' என்னும் நாள் அருள் நிறைந்த நாள் என்பதாலும் ,இறைவன், அன்று எல்லா உயிர்களுக்கும் நிறைவான அருள் வழங்கும் நாள் என்பதாலும், இறைவன் உலகை நோக்கி வருகிறார் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

மேலும் முக்கியமானது ,இறைவன் உலகை நோக்கி வருவதால்,அந்த நாள் உயிர்களுக்கு நிறைவான இன்பம் தரும் நாள் என்பதாலும் இயற்கையில் உள்ள கிரகங்கள் யாவும் தன்னுடைய பணிகளை (வேலைகளை ) செய்யாமல் உயிர்களுக்கு நன்மையே செய்யும் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது அதனால்தான் ''தைபிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள் நம் முன்னோர்கள் .

தைப்பூசத் திருநாளில் மனிதர்களாகிய நாம் இறைவனுடைய அருளைப் பெற்று மகிழ்ச்சியான இன்பம் தரும் நாளாகக் கருதி வடலூர் ஜோதி தரிசனம் கண்டு இறைவனுடைய அருளைப் பெற்று ,நீண்ட ஆயுள்,நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று நீடுழி வாழ்வோம்.
 
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !.....வள்ளலார்

Tuesday, October 21, 2014

சென்னையில் ஒரேநாளில் 7,000 பஸ்கள் இயக்கம்


சென்னையில் ஒரேநாளில்
7,000 பஸ்கள் இயக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும்
தீபாவளிப்
பண்டிகை இன்று கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மாநிலம் முழுவதும்
9,088 கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகள் கடந்த
17ம் தேதி முதல்
இன்று அதிகாலை வரை இயக்கப்பட்டன. இதில்
சென்னையில் மட்டும் 4,753 பஸ்கள் ஆகும்.
தவிர மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில்
தீபாவளி வரை தினசரி 200 பேருந்துகளும்
கூடுதலாக இயக்கப்படுகின்றன. கடந்த 4
நாட்களாக சென்னையில்
தொடர் மழை பெய்து வரும்
நிலையில், சிறப்பு பேருந்துகள் அனைத்திலும்
பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தன.
இந்நிலையில் நேற்று மழை விட்டவுடன் பயணிகள்
கொஞ்சம் கொஞ்சமாக
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வர
துவங்கினர். நேற்று மாலை 3 மணிக்கு மேல்
இன்று அதிகாலை 4
மணி வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில்
பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக,
தென்மாவட்டங்களான மதுரை,
திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட
பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கூட்டம்
அதிகமாகவே காணப்பட்டது.
சிறப்பு பேருந்துகள் வேறு இயக்கப்பட்டதால்,
பஸ்கள்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரவே சுமார்
45 நிமிடங்கள் நீடித்தது. இருந்தாலும் மைக்
மூலம் அறிவித்தது, நடைமேடை சீட்டு,
பஸ்களை முறைப்படுத்தியது உள்ளிட்ட
நடவடிக்கைகளால் குழப்பம்
தவிர்க்கப்பட்டதாக பயணிகள்
தெரிவித்தனர். போக்குவரத்து அதிகாரிகள்
கூறுகையில், இன்று (நேற்று) கூடுதல்
சிறப்பு பேருந்துகள் 1,400ம், வழக்கமாக
செல்லும் பஸ்கள் 2,300ம் மாநகர
போக்குவரத்து கழகம் சார்பில் 3,700 பஸ்கள்
என மொத்தம் 7,400 பஸ்கள்
இயக்கப்பட்டன. கூட்ட
நெரிசலை தவிர்ப்பதற்காக, அந்த
நேரத்துக்கு புறப்பட வேண்டிய பஸ்கள்
மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர்
செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள்
உள்ளிட்டோரும் நேரடியாக களப்பணியில்
ஈடுபட்டிருந்தனர். 24 மணி நேரமும்
சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக
கண்காணிக்கப்பட்டது என்றார்.

Saturday, October 18, 2014

நத்தமலை கிராமத்தில் தடுப்பு சுவர் இடிந்து தொடக்கப்பள்ளி ஓரமாக விழுந்தது.

த.வா.க  நத்தமலை
பதிவு செய்த நாள் - அக்டோபர் 18, 2014,
  இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள நத்தமலை கிராமத்தில் சாலை ஓராமாக இருந்த தடுப்பு சுவர் இடிந்து தொடக்கப்பள்ளி ஓரமாக விழுந்தது. விரைவில் அதை சீர்யமைக்க ஆவண செய்ய வேண்டும்.
 



 

Friday, October 17, 2014

சு.சாமி பாச்சா பலிக்கலை: 'அம்மா'வுக்கு ஜாமீன் கிடைத்தது


(17 Oct) டெல்லி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நரிமன் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது சாமியை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க விட மாட்டேன் என்று சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.எல்.சி.யில் வெளிமாநில தொழிலாளர்களை நியமிப்போம் என்பதா?


என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர் போராட்டத்தை நசுக்கும் சட்டவிரோத முயற்சிக்கு கடும் கண்டனம்!!

என்.எல்.சி. நிர்வாகத்தில் 44 நாட்களாக தங்களது அடிப்படை வாழ்வுரிமைக்காக ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில் அவர்களை மிரட்டும் வகையில் "வெளிமாநில தொழிலாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வோம்" என்று அந்நிறுவனத்தின் மனிதவள பொதுமேலாளர் என்.பாலாஜி தெரிவித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிற சட்டவிரோத நடவடிக்கை.

என்.எல்.சி. நிறுவனம் என்பது வானத்தில் இருந்து வந்த குதித்தது அல்ல.. நெய்வேலியைச் சுற்றிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் பூர்வீக நிலத்தில் அவர்களது ஒட்டுமொத்த உழைப்பால் மட்டுமே வந்தது. கடந்த 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து உழைத்து எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாதவர்களே பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக உழைத்து உழைத்து எந்த பலனையும் அனுபவிக்காத நிலையில்தான் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படையான வாழ்வுரிமைக் கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைத்து 43 நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் 3-ந் தேதி முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இதுவரையில் மொத்தம் 13 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அனைத்து பேச்சுவார்த்தைகளுமே தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன.
ஏனெனில் ஒப்பந்த தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவற்றை என்.எல்.சி. நிர்வாகம் அடியோடு நிராகரித்து வருகிறது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனமான போக்கினால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. 
இந்த நிலையில்தான் என்.எல்.சி. நிறுவனத்தின் மனித வளபொதுமேலாளர் என். பாலாஜி, "வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி அமர்த்துவோம்" என்று ஈவிரக்கமின்றி அறிவித்துள்ளார்.

என்.எல்.சி. நிறுவனம் என்பது தமிழ்நாட்டின் மக்களின் உழைப்பால் உருவானது. இந்த நிறுவனம் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் துணை நிறுவனங்களை ஏற்கெனவே அமைத்திருப்பதே தமிழ் மக்களுக்கு செய்திருக்கிற மாபெரும் துரோகம். எங்கள் வீட்டு சொத்தை எடுத்துக் கொண்டு போய் அடுத்தவன் வீட்டில் வைப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? 
இந்த நிலையில் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகாகப் போராடுகிற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை மிரட்டும் வகையில் என்.எல்.சி. நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களை நியமிப்போம் என்று அறிவித்திருப்பது எதேச்சதிகார ஆணவப் போக்காகும். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது சட்டவிரோதமானது. தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கிற, ஒடுக்கிற கொடூரமான நடவடிக்கை. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத போக்கு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி.யின் இந்த அராஜகப் போக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய, மனித உரிமை இயக்கங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்காக ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவரை பணிகளில் ஈடுபடுத்தினால் கடுமையான விளைவுகளை என்.எல்.சி. நிர்வாகம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன். ஏற்கெனவே மராட்டிய மண்ணில் தங்களது மாநில மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வெளிமாநிலத்தவர் தேர்வு எழுத வந்த போது ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை இந்த தருணத்தில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.

என்.எல்.சி. தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் கோரிக்கைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர்.

போயஸ் கார்டன் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர்

Wednesday, October 15, 2014

மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...


விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ..

சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள் ... ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது ....
இதில் இருந்து ஒன்று புரிந்தது ...

மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...
நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம் ...
எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் புண்ணியவான்களே....
இதற்க்காகவாது பாராட்டலாமே !