Search

Saturday, October 11, 2014

சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?


1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும்
மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால்
சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.

2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும்.
இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து,
வீங்கச் செய்யும்.

3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால்
ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.
யோகா எவ்வாறு உதவுகிறது:

1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர
உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது.
உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள்
சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து,
சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால்
மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும்
இல்லாமல் காற்று சென்று வருகிறது.
காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும்
திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக
அகற்றப்படுகின்றன.

2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்:
இவை அனைத்துமே உடலுக்கு நல்ல
ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும்
அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச்
சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல்
செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல்
மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல்
இருக்குமாறு செய்ய வேண்டும்.
இவை மேற்கூறியது போல் சைனஸ்களின்
காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.

3) யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால்
ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில்
வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.

4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக்
கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள்
வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம்
பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை,
திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது.
இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும்
வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும்
சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது.
நேத்திக் கிரியைகளை சரியான முறையில்
பயின்று பின்பற்றவும்!
மிளகு, மஞ்சள், தேன்
சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10
முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக்
கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர்
இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க
வேண்டும்.
காலையில்
அதை எடுத்து மென்று தின்றால்
சளி கரைந்துவிடும்.
அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில்
கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும்
தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம்.
அனைத்துப்
பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும்
குறைந்துவிடும்.
எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல்
அலர்ஜி என்று மட்டுமல்ல,
வேப்பிலையை உருண்டை செய்து தேனில்
நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.
தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான
பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.

No comments:

Post a Comment